படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் சிதம்பரம் என்பவர் இயக்கத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. கொடைக்கானலில் உள்ள புகழ்பெற்ற குணா குகையை பார்ப்பதற்காக சுற்றுலா வந்திருந்த 10 கேரள இளைஞர்களில் ஒருவர் அங்கிருந்த 100 அடிக்கும் ஆழமான பள்ளத்தில் தவறி விழுந்து விட, உடன் வந்த நண்பர்களில் ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த குழிக்குள் இறங்கி அவரை மீட்பது தான் கதை. இது கடந்த 2006ல் அங்கே நிஜமாகவே நடந்த சம்பவத்தை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது என படத்தின் இயக்குனர் சிதம்பரம் கூறி இருந்தார்.
2006ல் அந்த நிஜமான சம்பவத்தில் இடம்பெற்ற ரியல் மஞ்சும்மேல் பாய்ஸ் குழுவினரும் இதை உறுதிப்படுத்தி உள்ளனர். அதேசமயம் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்ற போது கொடைக்கானலில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை உதவிக்காக அழைத்தபோது அங்கிருந்த போலீஸார் இவர்கள் மீதே சந்தேகப்பட்டு தாக்கியதாகவும் உதவிக்கு வர மறுத்து ஒரே ஒரு காவலரை மட்டும் முதலில் அனுப்பி வைத்ததாகவும் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த படம் வெளியான சமயத்தில் பேட்டி கொடுத்தார்கள்.
இந்த நிலையில் தமிழக அரசின் உள்துறை செயலர் பி அமுதா, இப்படி ஒரு சம்பவம் 2006ல் நடைபெற்றதா, கொடைக்கானல் போலீஸார் இதுபோன்று சம்பந்தப்பட்ட நபர்களை தாக்கினார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளாராம்.
நிஜமாக நடந்த நிகழ்வில் இடம் பெற்ற யாரும் இது குறித்து போலீஸில் புகார் அளிக்காவிட்டாலும் கேரளாவில் உள்ள நிலாம்பூரை சேர்ந்த ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் காங்கிரஸ் தலைவர்களை ஒருவருமான சிஜூ ஆபிரகாம் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த விசாரணையை துவங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாம்.