ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரது 14வது படம் குறித்த அறிவிப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் 19ம் நூற்றாண்டில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக விடி 14 என்று டைட்டில் வைத்துள்ளார்கள்.
ஒரு போர் வீரனின் பின்னணியில் நடக்கும் கதை என்பதை உணர்த்தும் வகையிலான ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதில், 1854 முதல் 78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதை இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடித்த டாக்ஸிவாலா என்ற படத்தை இயக்கிய ராகுல் சங்கிரித்யன் என்பவர் தான் இப்படத்தையும் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.