இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரது 14வது படம் குறித்த அறிவிப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் 19ம் நூற்றாண்டில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக விடி 14 என்று டைட்டில் வைத்துள்ளார்கள்.
ஒரு போர் வீரனின் பின்னணியில் நடக்கும் கதை என்பதை உணர்த்தும் வகையிலான ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதில், 1854 முதல் 78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதை இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடித்த டாக்ஸிவாலா என்ற படத்தை இயக்கிய ராகுல் சங்கிரித்யன் என்பவர் தான் இப்படத்தையும் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.