ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

'ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறவர் சதீஷ் குமார். ஆரோகணம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பரதேசி, ரம்மி, புரியாத புதிர், தரமணி அண்டாவ காணோம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தரமணி படத்தின் மூலம் நடிகரான இவர் அதன்பிறகு பேரன்பு, கபடதாரி, பிரண்ட்ஷிப், அநீதி படங்களில் நடித்தார்.
தற்போது அவர் தான் தயாரிக்கும் படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார். படத்திற்கு 'குற்றம் கடிதல் 2' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு திரைக்கு வந்து தேசிய விருது உள்ளிட்ட அங்கீகாரங்களையும் வரவேற்பையும் பெற்ற 'குற்றம் கடிதல்' படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகிறது. பார்த்திபன் நடித்த 'புதுமை பித்தன்', கார்த்திக் நடித்த 'லவ்லி' படங்களை இயக்கிய ஜீவா இயக்குகிறார். சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார், டிகே இசையமைக்கிறார்.
சதீஷ்குமார் கூறும்போது "ஜீவாவின் ஸ்கிரிப்ட் என்னை மிகவும் கவர்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த கதை உருவாகிறது. இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒரு கருத்தை சொல்லும் இந்த திரைப்படம், மக்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்து பெரும் வெற்றி பெறுவதோடு, தேசிய விருதுகளையும் வெல்லும். ஜீவாவின் திரைப்பயணத்தில் 'குற்றம் கடிதல் 2' ஒரு மைல்கல்லாக இருக்கும்.
கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நடிக்கிறேன். ஓய்வு பெறும் சமயத்தில் குடியரசுத் தலைவர் கரங்களால் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.