போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து, அதில் இடம்பெற்ற 'அடியாத்தி' என்கிற பாடலின் மூலம் இன்னும் அதிக அளவில் தமிழ் தெலுங்கு ரசிகர்களிடம் பிரபலமானவர் மலையாள நடிகை சம்யுக்தா. அய்யப்பனும் கோஷியும் படம் தெலுங்கில் ரீமேக்கான போது அந்த படத்தில் நடிகர் ராணாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கில் நுழைந்தார் சம்யுக்தா. அதன் பிறகு பிம்பிசாரா, வாத்தி, விருபாக்ஷா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது சுயம்பு என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் சம்யுக்தா.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “தெலுங்கில் நடிப்பதில் எனக்கு மிகமிக சிரமமாக இருப்பது ஓவர் மேக்கப் போட்டுக் கொள்வது தான். மலையாளத்தில் நடிக்கும் போது மேக்கப் போடுவதற்கான வேலையே இருக்காது. இயல்பாக வீட்டில் இருந்து ஆபீஸ் கிளம்பி செல்வதற்கு என்ன மேக்கப் போட்டுக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு தான் வேலை இருக்கும். ஆனால் தெலுங்கு படப்பிடிப்பில் மேக்கப் என்பது தனி வேலையாகவே இருக்கிறது” என்று கூறியுள்ளார் சம்யுக்தா.