ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுந்தர். சி இயக்கி நடித்து திரைக்கு வந்துள்ள படம் அரண்மனை 4. அவருடன் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இப்படம் திரைக்கு வந்து 10 நாட்களில் 55 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அதோடு இன்னும் கூட்டம் குறையாமல் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுப்பதால் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த அரண்மனை-4 படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே தான் இரண்டு பாகங்கள் இயக்கி வெளியிட்டுள்ள கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கும் பணிகளில் இறங்கி இருக்கிறார் சுந்தர். சி. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.