தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டனர். கடந்த இரண்டு நாட்களாகப் பரவிய செய்திகளை அவர்களது அறிவிப்பு முற்றுப்புள்ளியை வைத்தது.
நேற்று இரவு தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை இருவரும் ஒரே விதமாகவே வெளியிட்டார்கள். ஒருவரது அறிவிப்பில் மற்றவர் பெயர் மட்டுமே மாற்றப்பட்டிருந்தது. மற்றபடி அந்த அறிவிப்பில் இருந்த வாக்கியங்கள் ஒன்றே.
ஜிவி பிரகாஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அறிவிப்பில் கமெண்ட் பிரிவை ஆப் செய்துவிட்டிருந்தார். அதனால், அதில் யாரும் கமெண்ட் செய்ய முடியவில்லை. அதே சமயம் சைந்தவி அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த அறிவிப்பை பதிவிட்டிருந்தார்.
பொதுவாக யார் பிரிந்தாலும் பிரிவதற்கு முன்பாகவே இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கிவிடுவார்கள். ஆனால், இருவருமே, இதுவரையிலும் அப்படி எதையும் செய்யவில்லை. மேலும், சமூக வலைத்தளத்தில் சைந்தவி தன்னுடைய பெயரில் இருக்கும் பிரகாஷ் என்பதையும் நீக்கவில்லை.
இருவரது பிரிவும் தற்காலிகமாக இருக்கட்டும். விரைவில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.