பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டனர். கடந்த இரண்டு நாட்களாகப் பரவிய செய்திகளை அவர்களது அறிவிப்பு முற்றுப்புள்ளியை வைத்தது.
நேற்று இரவு தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை இருவரும் ஒரே விதமாகவே வெளியிட்டார்கள். ஒருவரது அறிவிப்பில் மற்றவர் பெயர் மட்டுமே மாற்றப்பட்டிருந்தது. மற்றபடி அந்த அறிவிப்பில் இருந்த வாக்கியங்கள் ஒன்றே.
ஜிவி பிரகாஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அறிவிப்பில் கமெண்ட் பிரிவை ஆப் செய்துவிட்டிருந்தார். அதனால், அதில் யாரும் கமெண்ட் செய்ய முடியவில்லை. அதே சமயம் சைந்தவி அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த அறிவிப்பை பதிவிட்டிருந்தார்.
பொதுவாக யார் பிரிந்தாலும் பிரிவதற்கு முன்பாகவே இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கிவிடுவார்கள். ஆனால், இருவருமே, இதுவரையிலும் அப்படி எதையும் செய்யவில்லை. மேலும், சமூக வலைத்தளத்தில் சைந்தவி தன்னுடைய பெயரில் இருக்கும் பிரகாஷ் என்பதையும் நீக்கவில்லை.
இருவரது பிரிவும் தற்காலிகமாக இருக்கட்டும். விரைவில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.