சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
இளையராஜா படங்களுக்கு இசை அமைப்பதோடு மேடை கச்சேரிகளிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடைசியாக இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகிற ஜூலை 14ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திறந்தவெளி மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
இதுகுறித்து நிகழ்ச்சியை நடத்தும் அருண் கூறியதாவது: இளையராஜாவுடன் மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். 50 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் விழாவாக இந்த இசை விழா நடக்கவுள்ளது. இந்த இசை கச்சேரியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில், முழுப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்பாக நடைபெற்ற கச்சேரிகளில் ஏற்பட்ட சிக்கல்கள், எதுவும் இவ்விழாவில் ஏற்படாதவாறு, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சாப்பாட்டு பொருட்கள் அனைத்தும் வெளியில் கிடைக்கும் விலையில் உள்ளேயே கிடைக்கும்படி, வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறை வசதி முதல் குடிதண்ணீர் வசதி வரை அரங்கத்திற்குள் எளிதாக அனைவரும் அணுகும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
இசை விழாவிற்கு வருபவர்கள் வந்து செல்ல எளிமையாக இருக்கும் வகையில், அவர்கள் இலவசமாக பயணிக்க சென்னை மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வருபவர்கள், சென்னையின் பல பகுதிகளிலிருந்து வந்து போகும் வகையில் பயன்படுத்த தனியார் வாடகை பைக், வாடகை கார் உள்ளிட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, என்றார்.