படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

பெங்களூருவில் கடந்த வாரம் மே 20ம் தேதி போதை பார்ட்டி ஒன்று நடைபெற்றது. அங்கு போலீசார் நடத்திய சோதனையில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடத்தியது தெரிய வந்தது. அது தொடர்பாக சிலரை கைது செய்தனர்.
தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள், மாடல்கள் உள்ளிட்ட சில பிரபலங்கள் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். தெலுங்கு நடிகை ஹேமா, நடிகர் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் ஜானி ஆகியோரது பெயர்கள் அதில் அடிபட்டன. ஸ்ரீகாந்த், ஜானி, ஹேமா ஆகியோர் உடனடியாக மறுப்பு அறிக்கையை வெளியிட்டனர்.
இந்நிலையில் அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட 73 ஆண்கள் மற்றும் 30 பெண்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 59 ஆண்கள், 27 பெண்கள் ஆகியோரது சோதனை பாசிட்டிவ்வாக வந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் மீதும் வழக்கு பாயும் எனத் தெரிகிறது.
போதை பார்ட்டி நடந்த இடத்திலிருந்து 14.4 கிராம் எம்டிஎம்எ போதை மாத்திரைகள், 1.16 கிராம் எம்டிஎம்எ படிகங்கள், 6 கிராம் ஹைட்ரோ கஞ்சா, 5 கிராம் கோக்கைன், கோக்கைன் தடவப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள், 5 மொபைல் போன்கள், ஒரு வோக்ஸ்வோகன் கார், ஒரு லேண்ட் ரோவர் கார், டிஜே பயன்படுத்தும் ஆடியோ சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.