தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
துரோகி, இறுதிச்சுற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா, சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கினார். பல தேசிய விருதுகளை பெற்ற அந்த படத்தை தற்போது ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்துள்ளார். இந்நிலையில் அடுத்தபடியாக சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் சுதா.
ஆனால் திடீரென்று கார்த்திக் சுப்பராஜ் சொன்ன கதை பெரிய அளவில் இம்ப்ரஸ் பண்ணியதால் அவர் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி விட்டார் சூர்யா. இதனால் சூர்யா நடிப்பில் சுதா இயக்கயிருந்த புறநானூறு படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அடுத்து அவர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார். இது சூர்யாவுக்காக அவர் தயார் செய்திருந்த புறநானூறு படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.