தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இயக்குனர் சூர்யபிரகாஷ் மாரடைப்பால் இன்று(மே 27) காலை காலமானார்.
கடந்த 1996ல் ராஜ் கிரண், வனிதா நடித்த மாணிக்கம் படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சூர்யபிரகாஷ். தொடர்ந்து சரத்குமார் நடித்த மாயி, திவான் ஆகிய படங்களையும், ஜீவன் நடித்த அதிபர் படத்தையும் இயக்கினார். கடைசியாக வருஷநாடு என்ற படத்தை இயக்கினார். ஆனால் இன்னும் அந்தப்படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்று(மே 27) காலை இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சரத்குமார் இரங்கல்
நடிகர் சரத்குமார் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‛‛எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ், இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.