ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். அவருடைய நடிப்பு, நடனம் என அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும் அவர் பாடும் பாடலுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதனால் அவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் ஒரு பாடலாவது விஜய் பாடி ரசிகர்களை குஷி படுத்துவார். கடந்த சில ஆண்டுகளாகவே இது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், சூர்யா நடித்து வெளிவந்த 'பெரியண்ணா' என்கிற படத்தில் விஜய் மூன்று பாடல்களைக் பாடியிருந்தார். அதன்பின் இப்போது தான் ஒரே படத்தில் இரண்டு பாடல்களை பாடி உள்ளார். அதிலும் தனது படத்தில் அவர் இரண்டு பாடல்கள் பாடியிருப்பது இன்னும் ஒரு தனிச்சிறப்பு.