ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முக்கிய நகைச்சுவை நடிகர்கள் அனைவருமே கதாநாயகர்களாக மாறிவிட்டார்கள். ஆனாலும், சிலர் இன்னும் தங்களை கதையின் நாயகன் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சந்தானம், யோகி பாபு, சூரி ஆகியோர் கதையின் நாயகர்களாக மாறிவிட்டார்கள். சந்தானம், யோகி பாபு சில படங்களில் கதாநாயகர்களாக நடித்துவிட்டார்கள். சூரி இப்போதுதான் இரண்டாவது படத்திற்கு வந்திருக்கிறார்.
அவர் கதையின் நாயகனாக நடித்து வெளிவந்த 'விடுதலை' படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள 'கருடன்' படம் நாளை மறுதினம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது. போட்டிக்கு வேறு முக்கிய படங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் 'கருடன்' படத்திற்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன.
படம் நன்றாக அமைந்துவிட்டால் மீண்டும் ஒரு வெற்றியைப் பறித்து நாயகனாகவும் பறக்க ஆரம்பித்துவிடுவார் சூரி.