எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் |
நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்து வந்த வேட்டையன் படப்பிடிப்பை சமீபத்தில் நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து சில நாட்கள் சுற்றுப்பயணமாக அபுதாபி சென்று இருந்த அவர் அங்கே தனக்கு வழங்கப்பட்ட சிறப்பு கவுரவமான கோல்டன் விசாவை பெற்றுக் கொண்டார். மீண்டும் சென்னை விரும்பிய அவர் தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்களை தரிசிப்பதற்காக வழக்கம் போல ஒரு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை உத்தரகண்ட் போலீசார் வரவேற்று தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை தங்களது அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள உத்தரகண்ட் போலீஸார், “இந்த தேவ பூமியான பத்ரிநாத்தை தரிசிக்க இங்கே வந்திருக்கும் பிரபல இந்திய நடிகர் ரஜினிகாந்தை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தரிசனத்தை முடித்த பிறகு அவர் (ரஜினிகாந்த்) தரிசனம் சிறப்பாக இருந்தது என்றும் மக்களின் நலனுக்காகவும் நாட்டிற்காகவும் தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாகவும் கூறியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.