படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்து வந்த வேட்டையன் படப்பிடிப்பை சமீபத்தில் நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து சில நாட்கள் சுற்றுப்பயணமாக அபுதாபி சென்று இருந்த அவர் அங்கே தனக்கு வழங்கப்பட்ட சிறப்பு கவுரவமான கோல்டன் விசாவை பெற்றுக் கொண்டார். மீண்டும் சென்னை விரும்பிய அவர் தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்களை தரிசிப்பதற்காக வழக்கம் போல ஒரு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை உத்தரகண்ட் போலீசார் வரவேற்று தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை தங்களது அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள உத்தரகண்ட் போலீஸார், “இந்த தேவ பூமியான பத்ரிநாத்தை தரிசிக்க இங்கே வந்திருக்கும் பிரபல இந்திய நடிகர் ரஜினிகாந்தை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தரிசனத்தை முடித்த பிறகு அவர் (ரஜினிகாந்த்) தரிசனம் சிறப்பாக இருந்தது என்றும் மக்களின் நலனுக்காகவும் நாட்டிற்காகவும் தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாகவும் கூறியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.