தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் 'ரெபல்' என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை மமிதா பைஜு. அந்தப் படம் இங்கு சரியாக ஓடவுமில்லை. ஆனாலும், 'பிரேமலு' மலையாளப் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து ரசித்து மமிதாவைக் கொண்டாட ஆரம்பித்தனர்.
இன்றைய இளம் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறும் அளவிற்கு அவர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் மமிதா. நேற்று சென்னையில் உள்ள மால் ஒன்றில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதற்காக அந்த மாலுக்குள் வந்த மமிதாவை சென்னை ரசிகர்கள் மிரள வைத்துவிட்டார்கள்.
அவரைப் பார்க்க அதிக கூட்டம் கூடியது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக இல்லாததால் மமிதாவை நெருங்கியது கூட்டம். எப்படியோ தட்டுத் தடுமாறி அவரை கடைக்குள் அழைத்து வந்து கடையைத் திறந்துவிட்டனர். ஒரு பக்கம் ரசிகர்களின் அன்பு மழையில் மமிதா நனைந்தாலும் கூடிய கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போய் விட்டார்.
தமிழில் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்தால் நயன்தாராவின் இடத்தை எளிதில் பிடித்துவிடுவார் மமிதா.