பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஒருவழியாக பேச்சிலர் லைப்பிற்கு ‛பை' சொல்லிவிட்டு திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார் நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன். இந்து என்ற பெண்ணை வரும் 9ம் தேதி அவர் திருமணம் செய்கிறார். இவர்களின் திருமணம் எளிய முறையில் திருத்திணி முருகன் கோயிலில் நடைபெறுகிறது. இதுதொடர்பான திருமண பத்திரிக்கை ஏற்கனவே வெளியானது. தற்போது இந்த திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரேம்ஜியின் அண்ணனும், இயக்குனருமான வெங்கட் பிரபு.
அவர் வெளியிட்ட அறிக்கையில், ‛‛எங்கள் குடும்பத்தில் பல ஆண்டுகள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. ‛பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார்... சொப்பன சுந்தரியை இப்போ யாரு வச்சுருக்கா...' இவை எல்லாவற்றையும் விட ‛பிரேம்ஜிக்கு எப்போ திருமணம்' என்ற கேள்விக்கு வரும் ஜூன் 9ல் தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசீர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார் பிரேம்ஜி.
சிறிய அளவில் குடும்பத்தினர் முன்னிலையில் இந்த திருமணத்தை எளிய முறையில் நடத்த விரும்புகிறோம். இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமண பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். திருமண பத்திரிக்கை எப்படி வைரல் ஆனதோ அதேப்போன்று மணகள் மீடியாவை சேர்ந்தவர் என்று சில புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் போட்டோக்களை பகிர்கிறேன். எங்களின் பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். உறுதியாக அனைவரையும் திருமண வரவேற்பில் சந்திப்போம்.
இதன் உடன் விரைவில் ‛தி கோட்' அப்டேட்!''
இவ்வாறு வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.