ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாளத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். 13 வருடங்களுக்கு முன்பே தமிழில் 'சீடன்' என்ற படத்தில் முதன் முதலாக நடித்திருந்தார். சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் தனுஷ் மற்றும் பலர் அப்படத்தில் நடித்திருந்தனர். ஆனால், அப்படம் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு தமிழில் அவர் எந்தப் படங்களிலும் நடிக்கவேயில்லை.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் அவர் நடித்த 'கருடன்' படம் கடந்த வாரம் வெளிவந்தது. அவரது நடிப்பிற்கும் ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். 'சீடன்' படத்தில் விட்டதை 'கருடன்' படத்தில் பிடித்துவிட்டார். அடுத்து தமிழில் நடிக்க அவரைத் தேடி வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டதாம். நல்ல கதையும், கதாபாத்திரமும் கொண்ட படங்களில் தொடர்ந்து நடிக்க அவரும் முடிவு செய்துள்ளாராம்.
மலையாள நடிகர்களுக்கு தமிழில் நடிக்க எப்போதுமே ஆசை உண்டு. தற்போதைக்கு பஹத் பாசில் தான் இங்கு குறிப்பிடும்படியான வரவேற்பைப் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து பலரும் இங்கு ஒரு இடத்தைப் பிடிக்க முயற்சித்து வருகிறார்கள்.