ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? |
டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (ஜூன் 09) இரவு 7:15 மணிக்கு பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினி சென்னையில் இருந்து டில்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜவஹர்லால் நேருக்கு பிறகு 3வது முறையாக, பிரதமராக மோடி பதவியேற்பது மகத்தான சாதனை. லோக்சபா தேர்தலில், மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளனர். வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்தது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி. விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றதற்கு திருமாவளவன், சீமானுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு ரஜினி கூறினார்.