ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ரத்னம் என பல படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் திருவிளையாடல் படத்தில் தாய் தந்தையை சுற்றி வந்து விநாயகர் மாம்பழத்தை பெற்றுக்கொள்ள, உலகத்தையே சுற்றி விட்டு வரும் முருகப்பெருமாள் தனக்கு பழம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சியை பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர். அதன் உடன் ‛கடவுள் முருகனாகவே இருந்தாலும் வீட்டில் இரண்டாவது பிள்ளையாக பிறந்தால் இந்த நிலைதான் ஏற்படும் போல, என்னைப் போலவே இதே வேதனையை இன்னும் யாரெல்லாம் அனுபவித்துள்ளீர்கள்' என்ற ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார் பிரியா பவானி சங்கர். அவருடைய இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பதிவிட்டுள்ளனர்.