'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் பஹத் பாசில். அவருக்கு மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
தற்போது தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்', தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும் அவர்களது சம்பளம் சில கோடிகள் மட்டும்தான். மிகக் குறைந்த செலவில்தான் அங்கு படங்களைத் தயாரிப்பாளர்கள்.
மலையாளத்தில் குறைவான சம்பளம் வாங்கினாலும் மற்ற மொழிகளில் நடிக்கும் போது அதைவிட அதிக சம்பளம் வாங்குவது அவர்களது வழக்கம். பஹத் பாசில் தற்போது தெலுங்கில் நடித்து வரும் 'புஷ்பா 2' படத்திற்காக நாள் கணக்கில்தான் சம்பளம் வாங்குகிறாராம். ஒரு நாளைக்கு அவருக்கு 12 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.
தமிழ், தெலுங்கில் நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் இப்படித்தான் நாள் கணக்கு அடிப்படையில் சம்பளம் வாங்குவார்கள். அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை அவர்களுக்குத் தருவார்கள். தமிழில் தற்போது யோகி பாபு தான் இப்படி சம்பளம் வாங்கி வருகிறார்.