ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் பஹத் பாசில். அவருக்கு மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
தற்போது தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்', தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும் அவர்களது சம்பளம் சில கோடிகள் மட்டும்தான். மிகக் குறைந்த செலவில்தான் அங்கு படங்களைத் தயாரிப்பாளர்கள்.
மலையாளத்தில் குறைவான சம்பளம் வாங்கினாலும் மற்ற மொழிகளில் நடிக்கும் போது அதைவிட அதிக சம்பளம் வாங்குவது அவர்களது வழக்கம். பஹத் பாசில் தற்போது தெலுங்கில் நடித்து வரும் 'புஷ்பா 2' படத்திற்காக நாள் கணக்கில்தான் சம்பளம் வாங்குகிறாராம். ஒரு நாளைக்கு அவருக்கு 12 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.
தமிழ், தெலுங்கில் நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் இப்படித்தான் நாள் கணக்கு அடிப்படையில் சம்பளம் வாங்குவார்கள். அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை அவர்களுக்குத் தருவார்கள். தமிழில் தற்போது யோகி பாபு தான் இப்படி சம்பளம் வாங்கி வருகிறார்.