பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

குட்டிப் புலி, கொம்பன், மருது போன்ற அதிரடியான கிராமத்து படங்களை இயக்கியவர் முத்தையா. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் தோல்வி அடைந்தது. தற்போது தனது மகனை வைத்து சுள்ளான் சேது என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இதைத் தொடர்ந்து நடிகர்கள் விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக் ஆகிய இருவரையும் முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து படம் இயக்கவுள்ளார் முத்தையா. கடந்த 1988ம் ஆண்டில் நடிகர்கள் பிரபு, கார்த்திக் இருவரும் 'அக்னி நட்சத்திரம்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்போது இவர்கள் மகன்களான விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர் என்பது திரையுலகில் வியப்பாக பேசுகின்றனர்.