இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த சில நாட்களுக்கு முன் கன்னட திரையுலகின் பிரபல மறைந்த மூத்த நடிகர் ராஜகுமாரின் பேரனும், சமீபத்தில் வெளியான யுவா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவருமான நடிகர் யுவ ராஜ்குமார் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். முதல் படம் வெளியான நிலையிலேயே இப்படி கதாநாயகியுடன் இணைத்து பேசப்பட்டதும் தனது மனைவியை விவாகரத்து செய்ய அவர் விண்ணப்பித்ததும் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பதிலடியாக அவரது மனைவி ஸ்ரீதேவி பைரப்பா தானும் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
மேலும் நன்றாக சென்று கொண்டிருந்த தங்களது குடும்ப வாழ்க்கையில் கடந்த ஒரு வருடமாக புயல் வீசியதாகவும் அதற்கு காரணம் யுவா படத்தில் யுவ ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்த நடிகை சப்தமி கவுடாவுடன் தனது கணவருக்கு ஏற்பட்ட நெருக்கம் தான் காரணம் என்றும் பகிரங்கமாகவே குற்றம் சாட்டி இருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற காந்தாரா படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் இந்த சப்தமி கவுடா.
இந்த நிலையில் யுவராஜ் குமாரின் மனைவி ஸ்ரீதேவி பைரப்பா தேவையில்லாமல் அவர்களது விவகாரத்து விஷயத்தில் தனது பெயரை இழுத்துள்ளதாகவும் தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாகவே அவர் இதை செய்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் நடிகை சப்தமி கவுடா.
யுவா படத்தில் யுவராஜ் குமாருடன் இணைந்து நடித்ததை தவிர தனக்கும் அவருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லாத நிலையில் இப்படி தன் மீது அபாண்டமாக பொதுவெளியில் ஸ்ரீதேவி பைரப்பா குற்றம் சுமத்தியுள்ளார் என்று கூறி இதற்காக அவர் தனக்கு பத்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் மேலும் தன்னைப் பற்றி இப்படி அவதூறாக பேசியதற்கு பொது வெளியில் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பைரப்பாவுக்கு நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.