பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சமூக வலைத்தளங்களில் தனது காதலி நடிகை பவித்ரா கவுடாவிற்கு தகாத மெசேஜ்கள் அனுப்பியும், துன்புறுத்தல் செய்தவருமான ரேணுகா சுவாமி என்பவரைக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். அவரது காதலி பவித்ரா, மற்றும் சிலரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளார்கள்.
இந்நிலையில் நடிகர் தர்ஷனின் மேனேஜர் ஸ்ரீதர் என்பவர் தர்ஷனின் பெங்களூரூ பண்ணையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனிமையில் இருப்பதால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் தற்கொலைககு முன்பா வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ரேணுகா சுவாமி கொலையில் அவருக்கும் தொடர்புள்ளதா என்று விசாரித்து வந்தார்கள். வழக்கு விசாரணையில் தன் குடும்பத்தை இழுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தர்ஷனிடம் இதற்கு முன்பாக மேனேஜர் ஆகப் பணி புரிந்த மல்லிகார்ஜூன் என்பவர் 2018ம் வருடம் முதல் காணாமல் போய்விட்டார். தர்ஷனின் சினிமா பணிகள் அனைத்தையும் அவர்தான் கவனித்து வந்தாராம். ஆனால், அவர் சினிமா வினியோகத்தில் ஈடுபட்டு நஷ்டமடைந்துள்ளார். தர்ஷன் பெயரைச் சொல்லி அவர் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது.
தற்போதைய மேனேஜர் ஸ்ரீதர் தற்கொலை செய்துள்ள நிலையில் காணாமல் போன முன்னாள் மேனேஜர் மல்லிகார்ஜூன் பற்றியும் தற்போது பேச ஆரம்பித்துள்ளார்கள்.
கொலை வழக்கில் சிக்கியுள்ள தர்ஷன் விவகாரம் தற்போது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.