படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தமிழ் கடவுள் முருகனின் வரலாற்றை சொல்லும் ஸ்ரீவள்ளி, கந்தன் கருணை மாதிரியான புராண படங்கள் ஒரு காலத்தில் வெளிவந்தது. அதன் பிறகு முருகனின் பெருமைகளை பேசும் 'வருவான் வடிவேலன்' மாதிரியான சமூக படங்கள் வந்தது. சின்னத்திரையில் புராண மற்றும் பக்தி தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கியதும் பக்தி படங்கள் வருவது நின்று போனது.
இந்த நிலையில பல ஆண்டுகளுக்கு பிறகு 5 முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாராகும் ஒரு படத்தை ஜெயம் எஸ்.கே.கோபி தயாரிக்கிறார்.
இவர் தீவிர அரசியல்வாதியாக இருந்து பின்னர் ஆன்மிக ஈடுபாடு கொண்டு முருக பக்தர் ஆனவர். முருக கடவுளின் பெயரில் காது கேளாத, வாய் பேசாத, கண் தெரியாத மற்றும் ஆட்டிசம் உள்ள குழந்தைகளை 'தெய்வக் குழந்தைகள்' என்று அழைத்து அவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.
“நீண்ட நாட்களுக்கு பிறகு முருகர் குறித்த ஒரு திரைப்படத்தை தயாரிக் உள்ளேன். இதற்காக பல முருக பக்தர்களை சந்தித்து அவர்கள் வாழ்க்கையில் முருகன் கொடுத்த அற்புதங்களை சேகரித்து அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் முருக பக்தி குறித்த விழிப்புணர்வை இன்றைய தலைமுறையினர் இடம் பெரிய அளவில் எடுத்துச் செல்லும்” என்கிறார் கோபி.