திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 230 கோடி வசூலித்து இதுவரை மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையும் பெற்றது. இத்தனைக்கும் சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த படத்தில் பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாமலேயே அறிமுக இயக்குனர் சிதம்பரத்தின் இயக்கத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. அதே சமயம் இந்த படத்தின் தயாரிப்பு சமயத்தில் சிராஜ் வளையதாரா என்பவர், தயாரிப்பு செலவுக்காக தான் ஒன்பது கோடி பணம் கொடுத்து உதவியதாகவும் படம் வெளியானபின் லாபத்தில் 40 சதவீதம் தனக்கு கொடுப்பதாக கூறிய தயாரிப்பாளர்கள் அதை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள் என்றும் புகார் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றம் மஞ்சும்மேல் வாய்ஸ் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்கை முடக்க உத்தரவிட்டது. இதுகுறித்து போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்த பண மோசடி குறித்து அமலாக்க துறையும் தானாகவே முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது.
சமீபகாலமாக மலையாள திரை உலகில் கருப்பு பணம் உள்ளே நுழைந்துள்ளது என கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் இந்த வழக்கை கையில் எடுத்துள்ள அமலாக்கத்துறைக்கு மேலும் பல படங்களுக்கு இதுபோன்று கருப்பு பணம் செலவிடப்பட்டுள்ளது என்கிற தகவலும் கிடைத்துள்ளதாம். இதனை தொடர்ந்து கடந்த ஐந்து வருடங்களில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் வரவு செலவுகளை தோண்டும் வேலையில் அமலாக்கத்துறை இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.