சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன், பிரசாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி வரும் படம் ‛தி கோட்'. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். செப்., 5ல் படம் ரிலீஸாகிறது. ஏற்கனவே படத்திலிருந்து முதல்பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இருதினங்களுக்கு முன் ‛‛சின்ன சின்ன கண்கள்'' என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டனர். இதை விஜய்யும், மறைந்த பாடகி பவதாரிணியும் பாடினர். ஏஐ தொழில்நுட்பத்தில் பவதாரிணியின் குரலை பயன்படுத்தி பாட வைத்தார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
யுவன் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த பாடல் எனக்கு ஸ்பெஷலானது. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இப்பாடல் உருவாக்கத்தின் போது உடல்நலம் தேறிய பின் பவதாரிணி பாடினால் நன்றாக இருக்கும் என நானும், வெங்கட் பிரபுவும் எண்ணினோம். ஆனால் ஒருமணிநேரம் கழித்து அவர் இறந்த செய்தி வந்தது. அவரது குரலை இப்படி பயன்படுத்துவேன் என நினைக்கவில்லை. எனது இசை குழுவிற்கும், இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி'' என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.