தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'கல்கி 2898 ஏடி' படம் நாளை மறுதினம் ஜூன் 27ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து ஆந்திர மாநில அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி சிங்கிள் தியேட்டர்களில் 75 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 125 ரூபாயும் உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு தெலங்கானா அரசு சிங்கிள் தியேட்டர்களுக்கு 75 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு 100 ரூபாயும் உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்தது.
ஆந்திர அரசு அறிவித்த டிக்கெட் கட்டண உயர்வால் தற்போது சிங்கிள் தியேட்டர்களில் 236 ரூபாய் கட்டணமும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 324 ரூபாயும் இருக்கும். மேலும், இரண்டு வாரங்களுக்கு தினசரி 5 காட்சிகள் நடத்திக் கொள்ளவும் அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்துடன் ஒப்பிடும் போது ஆந்திர மாநிலத்தில் டிக்கெட் கட்டணம் கொஞ்சம் குறைவுதான். புதிதாக உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்களால் படத்தின் வசூல் தொகை அதிகமாகும்.