பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் |

பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'கல்கி 2898 ஏடி' படம் நாளை மறுதினம் ஜூன் 27ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து ஆந்திர மாநில அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி சிங்கிள் தியேட்டர்களில் 75 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 125 ரூபாயும் உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு தெலங்கானா அரசு சிங்கிள் தியேட்டர்களுக்கு 75 ரூபாயும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு 100 ரூபாயும் உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்தது.
ஆந்திர அரசு அறிவித்த டிக்கெட் கட்டண உயர்வால் தற்போது சிங்கிள் தியேட்டர்களில் 236 ரூபாய் கட்டணமும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 324 ரூபாயும் இருக்கும். மேலும், இரண்டு வாரங்களுக்கு தினசரி 5 காட்சிகள் நடத்திக் கொள்ளவும் அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்துடன் ஒப்பிடும் போது ஆந்திர மாநிலத்தில் டிக்கெட் கட்டணம் கொஞ்சம் குறைவுதான். புதிதாக உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்களால் படத்தின் வசூல் தொகை அதிகமாகும்.