பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

விடுதலை, கருடன் படங்களுக்கு பிறகு சூரி, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'கொட்டுக்காளி'. இதில் மலையாள நடிகை அன்னா பென் ஹீரோயினாக நடிக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் தியேட்டரில் வெளியிடப்படவில்லை என்றாலும் பல சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்பி வருகிறார் சிவகார்த்திகேயன்.
ஏற்கெனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்ற இந்த படம் தற்போது மேலும் ஒரு விருதினை பெற்றிருக்கிறது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் “டிரான்சில்வேனியா நாட்டில் நடைபெறும் திரைப்பட விழாவில் எங்களது 'கொட்டுக்காளிக் திரைப்படம் ஸ்பெஷல் ஜூரி விருது பெற்று அசத்தியுள்ளது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என தெவித்துள்ளார்.