ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் சூரி கதையின் நாயகனாக நடித்த விடுதலை மற்றும் கருடன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வரவேற்பையும், வெற்றியும் பெற்றுள்ள நிலையில் அவர் மீண்டும் கதையின் நாயகனாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. பல சர்வதேச விருதுகளை வென்ற கூழாங்கல் படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் மலையாள நடிகை அன்னா பென் இந்த படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ் மற்றும் ஹெலன் ஆகிய படங்களில் தனது மிகச் சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.
தற்போது கொட்டுக்காளி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, பஹத் பாசில் நடித்து தயாரித்த கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் அறிமுகமாகி நடித்தது மிகப்பெரிய அனுபவம். அந்த படத்தின் வெற்றியால் மிகவும் உற்சாகமாக இருந்த பஹத் பாசில் என்னையும் மற்றும் அந்த படத்தில் அறிமுகமான நடிகை கிரேஸ் ஆண்டனி மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோரையும் அழைத்து, “முதல் படம் உங்களை தானாகவே தேடி வந்து அழைத்துக் கொள்ளும். ஆனால் உங்களது அடுத்தடுத்த படங்களை நீங்கள் தான் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்” என கூறினார். அவர் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டுதான் எனது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.