படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி கடந்த 2008ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கி 2009ம் ஆண்டு ஆந்திரா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சரானார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறி கைதி நம்பர் 150 என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார் சிரஞ்சீவி. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவருக்கு மீண்டும் அரசியலில் என்ட்ரி கொடுக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். தனது தம்பியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கணிசமான வெற்றி கிடைத்து அவர் துணை முதல்வர் ஆகி இருக்கிறார். அடுத்த படியாக தம்பியின் ஜனசேனா கட்சியில் சிரஞ்சீவி முக்கிய பொறுப்புக்கு வரப்போவதாக ஆந்திராவில் செய்தி பரவி வருகிறது.