தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஹிந்தி இயக்குனரான ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில், சூர்யா நடிக்கவிருந்த ஹிந்திப் படமான 'கர்ணா' படம் டிராப் செய்யப்பட்டதாக கடந்த சில தினங்களாக பாலிவுட்டில் தகவல் பரவியது.
மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரமான கர்ணனை மையமாக வைத்து அப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். இப்படத்தில் திரவுபதியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
படத்தில் எண்ணற்ற விஎப்எக்ஸ் காட்சிகள் இடம் பெற உள்ளதால் முதலில் போட்ட பட்ஜெட்டை விட தற்போது பட்ஜெட் எகிறிவிட்டதாம். சுமார் 500 கோடிக்கும் செலவாகும் என தெரிய வந்ததால் படத்தை டிராப் செய்ததற்காகக் காரணமாகச் சொன்னார்கள்.
ஆனால், படத்தை டிராப் செய்யவில்லை, தற்போதைக்குத் தள்ளி வைத்துள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கிறது. இந்த வருடத்தின் கடைசியில் படத்தை ஆரம்பிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.
ஹிந்திப் படங்களில் நடித்து பான் இந்தியா ஸ்டாராக உயர வேண்டுமென்றுதான் சென்னையை விட்டு மும்பை சென்று சூர்யா செட்டில் ஆனார்.