பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ரசிகர் ஒருவரைக் கடத்தி வந்து கொலை செய்த குற்றத்திற்காக கன்னட நடிகர் தர்ஷன், அவரது காதலி நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்றக் காவலுக்குப் பிறகு பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டார். இதுவரையில் அவரை சந்திக்காமல் இருந்த குடும்பத்தினர் நேற்று சிறைக்குச் சென்று தர்ஷனை சந்தித்துள்ளனர்.
தர்ஷன் அம்மா மீனா, சகோதரர் தினகர், மனைவி விஜயலட்சுமி, மகன் வினீஷ் நேற்று காலையில் சிறையில் தர்ஷனை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது குடும்பத்தினரிடம் தர்ஷன் கதறி அழுதுள்ளதாகத் தெரிகிறது. அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்தனராம்.
சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசுவாமி என்ற தர்ஷனின் ரசிகர், தர்ஷனின் காதலியான பவித்ரா கவுடாவுக்கு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ்கள் அனுப்பியுள்ளார். அதனால், வந்த ஆத்திரத்தில்தான் தர்ஷன் ஆட்களை வைத்து அவரைக் கொன்றார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதன்பின்னரே சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரேணுகா சுவாமியின் மனைவி அவரது முதல் குழந்தையை விரைவில் பெற்றெடுக்க உள்ளார்.
ஜூலை 4 முதல் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் தர்ஷன். இந்த கொலை விவகாரம் கர்நாடகாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.