ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சமீபகாலமாக மறைந்த கலைஞர்களை மீண்டும் திரையில் நடிக்க வைப்பது அவர்களின் குரலை ஒலிக்க வைப்பது என ஏஐ என்ற தொழில்நுட்பத்தை திரையுலகினர் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரஜினி நடித்த லால் சலாம் படத்தில் மறைந்த பாடல்கள் பம்பாய் பாக்யா மற்றும் சாகுல் ஹமீத் ஆகியோரின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வந்த நிலையில், கோட் படத்தில் விஜயகாந்தை திரையில் கொண்டு வந்திருப்பதோடு, இளையராஜாவின் மகள் பவதாரணி குரலையும் இதே டெக்னாலஜி மூலம் ஒரு பாடல் பாட வைத்திருந்தார்கள்.
அதையடுத்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்த மனோபாலா மற்றும் விவேக் ஆகிய இருவரும் மரணம் அடைந்து விட்டதை அடுத்து அவர்களுக்கு டப்பிங் கொடுப்பதற்கும் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளார்கள். லால் சலாம், கோட் படங்களுக்கு பணியாற்றிய அதே கிருஷ்ண சேத்தன் என்பவர்தான் இந்தியன் 2 படத்திலும் விவேக் மற்றும் மனோபாலா ஆகிய இருவரின் குரலில் டப்பிங் பேச வைத்திருக்கிறாராம்.