விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் |

இந்திய சினிமாவின் ‛இசை ராஜா' இசையமைப்பாளர் இளையராஜா 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நாளை(ஜூலை 14) நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் அவரின் பல எவர் கிரீன் பாடல்கள் பாடப்பட இருக்கிறது. இளையராஜா உடன் விபாவரி, ஸ்வேதா மோகன், எஸ்.பி.பி.சரண், ஹரி சரண், மது பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பாட உள்ளனர். அதோடு நிகழ்ச்சியின் ஹைலைட்டாக ஹங்கேரி இசை கலைஞர்களும் நிகழ்ச்சியில் இசையமைக்க உள்ளனர்.
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்க உள்ளது. அருண் ஈவன்ட் மற்றும் மெர்குரி நிறுவனத்தினர் இணைந்து இவ்விழாவினை நடத்துகின்றனர்.
மக்கள் போக்குவரத்திற்கு சிரமமின்றி வந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பு, அவசர உதவி, மருத்துவம், குடிநீர் என்று அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
அப்புறம் என்ன சென்னை வாசிகளே... இளையராஜாவின் இன்னிசை மழையில் நனையத் தயாரா...!