ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கடந்த 2021ம் ஆண்டில் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வெளிவந்த படம் 'பேச்சுலர்'. இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இவர் அடுத்து கார்த்தியை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வந்தது. இந்த நிலையில் திடீரென சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக புதிய படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளனர் .