இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஏ.ஆர் முருகதாஸ் திருச்செந்தூர் முருகனை தரிசிப்பதற்காக வருகை தந்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நுழைவதற்கு முன்பாக ஆண்கள் தங்களது மேலாடையை கழட்டி விட்டு செல்வது வாடிக்கையான ஒன்று.
அப்படி ஏ.ஆர்.முருகதாஸ் தனது சட்டையை கழட்டும் போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் ஆர்வம் மிகுதியால் அதை வீடியோ எடுக்க ஆரம்பித்தார். இதனால் சங்கடமாக உணர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் அந்த ரசிகரிடம் வீடியோ எடுக்க வேண்டாம் என்று கூறினார். இருந்தாலும் அவர் தொடர்ந்து வீடியோ எடுக்க துவங்க உடன் வந்த தனது உதவியாளர்களிடம் அதை கவனித்து தடுக்குமாறு கூறினார்.
ஆனாலும் அந்த ரசிகர் முருகதாஸின் உதவியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பால் பலரது கவனமும் இவர்களை நோக்கி திரும்பியது. இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. பலரும் ஏ.ஆர் முருகதாஸுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருவதுடன், பிரபலங்களின் பிரைவசியில் எந்நேரமும் தலையிட்டு கொண்டிருக்கக் கூடாது என அந்த வீடியோ எடுத்த சம்பந்தப்பட்ட ரசிகரையும் திட்டி தீர்த்து வருகின்றனர்.