தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மெண்ட் சார்பில் ராம் மணிகண்டன் தயாரித்துள்ள படம் 'சதுர்'. அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ், தாமோதரன், செல்லா, 'ஜீவா' ரவி, சூர்யா, அர்னவ் ஹரிஜா, பிரதீப் அரி, கிரிஷ் பாலா, ஜெகன் கிரிஷ், உள்பட பலர் நடித்துள்ளனர். அகஸ்டின் பிரபு எழுதி இயக்கியுள்ளதோடு விஎப்எக்ஸ் பணியும் மேற்கொண்டுள்ளார். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தமிழ் மன்னர் ஒருவரால் கடலுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட ஒரு புதையலை தேடி இன்றைய இளைஞர்கள் செல்வது மாதிரியான கதை.
படம் பற்றி இயக்குனர் அகஸ்டின் பிரபு கூறும்போது “இப்படத்தில் 1,250 விஎப்எக்ஸ் ஷாட்டுகள் இருக்கிறது. தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைச் சொல்லி, தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்றேன். பிறகு பைலட் படத்தை உருவாக்கிக் காட்டினேன். உடனே அவர் என்னை முழுமையாக நம்பினார்.
கடலுக்குள் நடக்கும் காட்சி மற்றும் கார்சேஸ், பிளைட் பைட், ஹிஸ்டாரிக்கல் காட்சிகள் உள்பட பிரமிக்கத்தக்க காட்சிகள் நிறைய இருக்கிறது. சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு கதை தொடங்குகிறது. 1945, 1967 ஆகிய காலக்கட்டங்களில் நடந்து, இறுதியில் இன்றைய வருடத்தில் முடிகிறது. அனைத்து ரசிகர்களுக்கும் 'சதுர்' படம் புதிய அனுபவமாக இருக்கும். அடுத்தமாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.