விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
கடந்த 2021ம் ஆண்டு நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்றார் சமந்தா. அதன்பிறகும் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார். அதிலும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனமாடி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இடையில் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். சமீபத்தில் விவாகரத்துக்கு பிறகு தான் சந்தித்த விஷயங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் சமந்தா.
அதில், ‛‛வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற வேண்டுமென்று நினைப்போம். குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் என்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கக் கூடாது என்று தான் நினைக்கிறேன். என்றாலும் எதுவும் நம் கையில் இல்லை. வாழ்க்கை என்ன கொடுக்கிறதோ அதை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும். அனைவர் வாழ்க்கையிலும் பிரச்னைகள், வலிகள் இருக்கிறது. அதை நாம் எப்படி கடந்து வருகிறோம் என்பது தான் முக்கியம். அந்த வலியை கடந்து விட்டால் நாம் வெற்றியாளர்தான். அந்த வகையில் நான் தற்போது என்னை வலிமையானவளாக உணர்கிறேன். குறிப்பாக ஆன்மிகம் தான் எனது வலியை கடந்து வலிமை பெற எனக்கு உதவி செய்தது'' என்று கூறியுள்ளார்.