இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் ரேணிகுண்டா, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை சனுஷா சந்தோஷ். குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய இவருக்கு சில படங்களில் கதாநாயகியாகவும் பல படங்களில் தங்கை கதாபாத்திரங்களுமே கிடைத்து வந்தன.
தமிழில் 2017ல் வெளியான கொடிவீரன் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகு 2019-ல் தெலுங்கில் வெளியான ஜெர்சி படத்தில் நடித்தவர் பின்னர் நடிப்பை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டு மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் யுனிவர்சிட்டியில் குளோபல் மெண்டல் ஹெல்த் அண்ட் சொசைட்டி மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் படிப்பை இரண்டு வருடமாக படித்து வந்தார். தற்போது படிப்பை முடித்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டமும் பெற்று விட்டார் சனுஷா சந்தோஷ்.
இது குறித்த புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ள அவர், ‛‛கடந்த இரண்டு வருடங்களாக வீட்டை மிஸ் பண்ணியது, அழுதது, தூக்கம் இல்லா இரவுகள், நிறைய பார்ட் டைம் புல் டைம் வேலைகள், கடினமான பணிகள் மற்றும் உடல் நலக்குறைவு, மன அழுத்தம் என அனைத்தையும் கடந்து இந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதற்கான பலனை இப்போது பெற்றுள்ளேன்'' என்று உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.