இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
90ஸ் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வளம்வந்தவர் நடிகை ரம்பா. டாப் இடத்தில் இருக்கும்போது சினிமாவை விட்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து விட்டார். அதற்கு பிறகு சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்து கொண்ட இவர் தினமலர் நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என என் குழந்தைகள் கேட்டு வந்தனர். அதனை விஜயிடம் தெரிவித்தேன். அதன்படி, சமீபத்தில் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் குழந்தைகள் அவரின் ரசிகர்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ‛நினைத்தேன் வந்தாய்' படத்தில் நான் நடித்தபோது பார்த்த அதே போலவே இப்போதும் விஜய் அதே போன்று இருக்கிறார். ஆனால் அந்த படத்தில் நடித்தபோது அமைதியாக இருப்பார், இப்போது என் குழந்தைகளுடன் நன்றாக பேசி பழகினார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது நான் கனடாவில் இருந்தேன். அவர் அரசியலுக்கு வருவது துணிச்சலான முடிவு. நான் சினிமாவில் நடித்து 25 ஆண்டுகள் ஆனாலும், நீண்ட இடைவெளி விட்டுவிட்டேன். பெரும்பாலான பிடித்த ஹீரோக்களுடன் ஏற்கனவே நடித்துவிட்டேன். இந்தாலும், இனிமேல், நடிப்பதென்றால் பிடித்தமான ஹீரோ, பிடித்தமான ரோல் கிடைத்தால் நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.