தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபல கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகி, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட 15க்கும் மேற்பட்டோரும் சிறையில் இருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு நடிகர் தர்ஷன் தனக்கு தனது வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றும் படுத்து உறங்குவதற்காக மெத்தை மற்றும் உடுத்துவதற்கு தனது சொந்த துணி ஆகியவை வேண்டும் என்றும் கேட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தார்.
வியாழனன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. தர்ஷனின் சார்பாக வாதிட்ட அவரது வழக்கறிஞர் சிறையில் கொடுக்கப்படும் குறைந்த அளவிலான உணவு தர்ஷனின் உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதற்கு ஏற்றதாக, போதுமானதாக இல்லை. அதனால் பக்க விளைவாக அவருக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே அவருக்கு வீட்டு உணவை அனுமதிக்க வேண்டும். அவருக்கு படுத்து உறங்குவதற்கு மெத்தை தரவும் அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். ஆனாலும் இந்த வாதத்தில் திருப்தி அடையாத நீதிபதி விஸ்வநாத் சி கவுடர் தர்ஷனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.