ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் சேத்தன். ஏராளமான படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான 'விடுதலை' படத்தில் அவர் நடித்த நெகட்டிவான போலீஸ் அதிகாரி கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது. விடுதலை இரண்டாம் பாகத்திலும் அந்த கேரக்டர் தொடர்கிறது. இந்த நிலையில 'ஜமா' என்ற படத்தில் அதுபோன்ற ஒரு முக்கியமாக கேரக்டரில், அதாவது மூத்த தெருக்கூத்து கலைஞர் வேடத்தில் நடித்துள்ளார். படம் வருகிற 2ம் தேதி வெளிவருகிறது.
இதுகுறித்து அவர் கூறியதாவது : கிரைம், த்ரில்லர் அல்லது மேற்கத்திய கருப்பொருளை கதைக்களமாகத் தேர்ந்தெடுப்பது பல புது இயக்குநர்களின் பொதுவான நடைமுறையாகிவிட்டது. நமது கலாச்சாரத்தின் நெறிமுறை அழகியலை கதையாக்கிய இந்த படத்தின் இயக்குனர் பாரியின் துணிச்சலான முடிவு தனித்துவமானது. விடுதலைப் படத்திற்குப் பிறகு, 'ஜமா' படத்தில் வலுவான கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. திரையரங்குகளில் இருக்கும் ஒவ்வொரு பார்வையாளர்களின் இதயத்தையும் தொடும் படம் இது. என்றார்.
இந்த படத்தில் பாரி இளவழகன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.