தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் ஜுலை 12ம் தேதி வெளிவந்த படம் 'இந்தியன் 2'. எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாகப் பரவியதால் இந்தப் படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இருந்தாலும் 150 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் கடந்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து இப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாம். படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் அவ்வளவு தொகையைக் கொடுத்துள்ளார்களாம். இரண்டு வாரங்களில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. சென்னையில் கூட ஒரு சிங்கிள் தியேட்டரிலும் இப்படம் ஓடவில்லை. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் ஓரிரு காட்சிகள் ஓடுகிறது. விரைவில் தியேட்டர் ஓட்டமும் முடிவுக்கு வந்துவிடும்.
எனவே, ஓடிடியில் படத்தைத் திட்டமிட்டதற்கு முன்பாகவே வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறதாம். பொதுவாக ஒரு படம் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் படத்தை வெளியிடுவது வழக்கம். பெரிய படமாக இருந்தால் இன்னும் சில வாரங்கள் தள்ளி வெளியிடுவார்கள். 'இந்தியன் 2'க்கு அதிக விலை கொடுத்துவிட்டதால் நான்கு வாரங்களுக்குள் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிறார்கள்.