இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல சின்னத்திரை நடிகரான வசந்த் வசி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் செந்தில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முன்னதாக ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 1, பாரதிதாசன் காலனி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வேலையில்லா பட்டதாரி படத்தில் இயக்குநர் பாலாஜி மோகன் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்தது இவர் தான். ஆனால், திரையுலகம் இவரை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
காரணம் இவர் ஹீரோவாக நடித்த சீரியல்களின் புரோமோக்கள் மற்றும் போஸ்டர்களில் இவரது முகத்தை காண்பிக்கவே மாட்டார்கள். இதன் காரணமாகத்தான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடரிலிருந்து வசந்த் வசி வெளியேறினார். ஆனால், அதன் பிறகு நடித்த ஹீரோவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்திலும் இவர் நடித்த பிரசாத் கதாபாத்திரத்திற்கு இவர் வெளியேறிய பின் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2விலும் வசந்த் வசி தற்போது விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக மீண்டும் வெங்கட் ரங்கநாதன் எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த கதையிலும் வெங்கட் எண்ட்ரிக்கு பிறகு தான் செந்தில் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், ரசிகர்கள் சிலர் வசந்த் வசியை சின்னத்திரை வஞ்சிப்பதாக புகார் கூறி வருகின்றனர்.