இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள படம் 'கவுண்டம்பாளையம்'. அலிபா, அனிஷ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பழனிசாமி தயாரித்துள்ளர், விஜி சங்கர் இசை அமைத்துள்ளார். திருஞானசம்பந்தம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஆணவ கொலை மற்றும் நாடக காதலை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே படம் குறித்த சலசலப்பு நிலவி வந்தது. படம் கடந்த ஜூலை 5ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் திரையரங்கை சேதப்படுத்துவோம் என்று சிலர் மிரட்டுவதாகக் கூறி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து ரஞ்சித் போலீசில் புகார் அளித்தார். நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் கவுண்டம்பாளையம் படம் வருகிற 9ம் தேதி வெளியிடப்படுவதாக ரஞ்சித் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 219வது நினைவு நாளையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரஞ்சித் நிருபர்களிடம் கூறியதாவது:
நாடக காதலால் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, நான் இயக்கி நடித்த 'கவுண்டம்பாளையம்' படம் பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு வரும் 9ம் தேதி திரையரங்கில் வெளியிடப்பட உள்ளது. நாடக காதல் என்பதே ஒரு நடிப்பு. சைக்கிள், கார், பைக், வைத்திருப்பவர்களை பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களாக தவறாக புரிந்து கொண்டு காதலர்கள் தவறாக தேர்வு செய்கின்றனர். காதலர்கள் நல்ல காதலை தேர்ந்தெடுக்க வேண்டும். என்பதை சொல்லும் படத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். இந்த படம் எந்த சமூகத்தினரின் மனதும் புண்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.