ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் தங்கலான். ரஞ்சித் இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற 15ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது இப்படத்திற்காக சிலம்ப பயிற்சி எடுத்து சண்டை காட்சியில் நடத்திருக்கும் மாளவிகா மோகனன் மேடைக்கு வந்தபோது, இந்த மேடையில் நீங்கள் யாருடன் சிலம்ப சண்டை போட விரும்புகிறீர்கள்? என்று தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்க, தங்கலான் என்று பதில் கொடுத்தார் மாளவிகா மோகனன். ஆனால் அதற்கு விக்ரம் மறுத்துவிட்டார். அதையடுத்து இப்படத்தில் நடித்திருக்கும் இன்னொரு நடிகையான பார்வதியை மேடைக்கு அழைத்து மாளவிகாவுடன் கம்பு சுற்ற வைத்தார்கள். அவர்கள் இருவரும் சிறிது நேரம் சிலம்பக் கம்புகளை கையில் பிடித்தபடி சுழற்றிக் கொண்டு நின்றார்கள்.