தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையிலும் மலையாள நடிகைகள் சில சிறப்பான படங்களில் கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழைப் பெறுகிறார்கள். தமிழில் மற்ற மொழி நடிகைகளின் ஆதிக்கம்தான் அதிகம் என்றாலும், மலையாள நடிகைகளின் படங்கள் தேர்வு ஆச்சரியமளிக்கும்.
அவர்கள் நடிகர் யார், தயாரிப்பு நிறுவனம் யார் என்பதைப் பற்றியெல்லாம் பார்ப்பதில்லை. நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என்றால் அதில் நடிப்பதற்கு முன் வருவார்கள். அப்படியான நடிகையர் இப்போதும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.
'வாழை' படத்தில் நடித்துள்ள நிகிலா விமல், 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ள அன்னா பென் ஆகியோர் இதற்கு சமீபத்திய உதாரணம். நிகிலா, அன்னா பொன் ஆகியோர் அவர்களது படங்களில் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்கள் படம் வெளிவந்த பின் அவர்களைப் பற்றிப் பேச வைக்கும் என படக்குழுவினர் சொல்கிறார்கள். தமிழக கிராமத்துப் பெண்களாகவே அவர்கள் மாறியுள்ளார்கள் என படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகிறது என்பது கூடுதல் சிறப்பு.