2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதற்கடுத்து தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' ஆகிய படங்களை இயக்கினார். அவரது இயக்கத்தில் சிறுவர்கள் நடித்துள்ள 'வாழை' படம் இந்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது.
அதோடு தற்போது துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் 'பைசன்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்த பின் தனுஷ் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். அதற்கடுத்து கார்த்தி நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
'வா வாத்தியாரே, மெய்யழகன்' ஆகிய படங்களில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். தற்போது 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு 'கைதி 2' படத்தில் நடிக்க உள்ளார். 'கூலி' படத்தை இயக்கி முடித்த பின் லோகேஷ் கனகராஜ் 'கைதி 2' படத்தை இயக்கலாம் எனத் தெரிகிறது.
கார்த்தியிடம் படத்தின் கதையை ஐந்தே நிமிஷத்தில் சொல்லி முடித்திருக்கிறார் மாரி செல்வராஜ். அதற்கே ஆச்சரியப்பட்ட கார்த்தி ஓகே சொல்லிவிட்டார் எனத் தகவல்.