பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள ‛ரகு தாத்தா' படம் ஆக., 15ல் ரிலீஸாகிறது. மதுரை வந்த கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‛‛எனக்கு பிடித்த ஊர் மதுரை. மல்லிப்பூ, மீனாட்சி அம்மன் கோயில் என பிடித்தமான நிறைய விஷயங்கள் உள்ளன. ரகு தாத்தா படத்தில் பெண்ணியத்திற்காக போராடும் பெண்ணாக நடித்துள்ளேன். பெண்கள் என்றால் இப்படி தான் இருக்கணும், இப்படி தான் ஆடை அணியணும் என பல்வேறு திணிப்புகள் உள்ளன. கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் மீது திணிக்கப்படும் விஷயங்களை காட்டி உள்ளோம். ஹிந்தி திணிப்பு பற்றியும் ஆங்காங்கே பேசியிருக்கிறோம். ஆனால் எதுவுமே சீரியஸாக இருக்காது. முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி உள்ளோம்.
இப்போதைக்கு அரசியல் வரும் ஆசை இல்லை, நடிப்பு மட்டும் தான். எதிர்காலத்தில் அரசியல் ஆசை வரலாம், வராமலும் போகலாம். எனக்கு ஹிந்தி தெரியும். ஹிந்தியை திணிக்க கூடாது என சொல்லியுள்ளோம். மொழி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் திணிப்பு என்பது தவறானது. எல்லா துறையிலும் பிரச்னை இருக்கிறது. சினிமா என்பதால் அது பெரிதாக தெரிகிறது'' என்றார்.