கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' |
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியாவில் அமைந்துள்ள வீட்டில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வாடகைக்கு குடியிருந்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா வசித்து வந்த வாடகை வீடு என்பது அஜ்மத் பேகம் என்பவருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜ்மத் பேகத்தின் சகோதரர் முகமது ஜாவித் என்பவர் யுவன் சங்கர் ராஜா மீது திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் தற்போது நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில், ‛கடந்த 2 ஆண்டுகளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீடு எனது சகோதரிக்கு சொந்தமானது. இந்த வீட்டுக்கு யுவன் சங்கர் ராஜா ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தார். வாடகையை எனது சகோதரி கேட்கும்போதெல்லாம் யுவன் சங்கர் ராஜா தராமல் அலட்சியம் காட்டி மறுத்து பேசி வந்துள்ளார்.
எனவே நான் வாடகை பணம் கேட்க போன் செய்தபோதும் அவர் போனை எடுக்கவில்லை. தற்போது அவர் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறி உள்ளார். மேலும் நேற்றும், இன்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து சென்றுள்ளார். இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளேன். இதை தீர விசாரித்து யுவன் சங்கர் ராஜாவிடம் வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்,' எனத் தெரிவித்துள்ளார்.
நோட்டீஸ்
இந்த நிலையில், வீட்டு உரிமையாளர் பொய்யான புகார் அளித்ததாகவும், தனது பெயருக்கு களங்கம் கற்பிக்க வீட்டு உரிமையாளர் முயற்சிப்பதாகவும் கூறி, ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு யுவன் சங்கர் ராஜா தரப்பில் வீட்டு உரிமையாளருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.