பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாள நடிகைகள் பாதுகாப்பு தொடர்பாக விசாரித்த ஹேமா கமிஷன் அறிக்கை, மலையாள திரை உலகில் புயலை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் மலையாள முன்னணி நடிகர் ஒருவர் தவறான நோக்கத்தில் தன்னை தனி அறைக்கு அழைத்ததாக பிரபல முன்னணி நடிகர் திலகனின் மகள் சோனியா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது : எனது தந்தையை, நடிகர்கள் சங்கமான 'அம்மா'வில் இருந்து நீக்க 15 பேர் கொண்ட ஆணாதிக்க சக்திகள்தான் காரணம். எனது தந்தையின் மரணத்திற்கு பின், எனக்கும் பிரபல முன்னணி நடிகர் மூலம் மோசமான அனுபவம் ஏற்பட்டது. அந்த நடிகரின் பெயரை இப்போது கூற விரும்பவில்லை. நான் சகோதரனை போல் நினைத்து பழகி வந்த அந்த முக்கிய நடிகர் என்னை 'மகளே' என போனில் அழைத்து நேரில் பார்க்க வேண்டும் என கூறினார்.
அவரது பேச்சின் உள் அர்த்தம் எனக்கு புரிந்ததால், அவரது அழைப்பை தவிர்த்தேன். நான் படங்களில் நடித்தது இல்லை, ஆனாலும் என்னிடம் அப்படி நடந்து கொண்டார். அவரால் பின்னாளில் மன உளைச்சலுக்கு ஆளானேன். அந்த நடிகர் ஒரு கூட்டத்தில் எனது தந்தையை 'இறங்கி போடா' என கூறி அவமானப்படுத்தினார். நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையில் குறிப்பிட்ட 15 பேர் மாபியா கும்பலில் அவரும் ஒருவர்.
மலையாள சினிமாவில் எனது அப்பா திலகன் செய்த சாதனை, பெற்ற விருதுகள் காரணமாக அவரை முன்னணி நடிகர்கள் புறக்கணித்தனர். குணச்சித்திர வேடம் என்றாலும் வில்லன் கதாபாத்திரம் என்றாலும் மலையாள திரைப்படங்களில் கதாநாயகனுக்கு இணையாக பேசப்பட்டவர். அதனாலேயே அவரை பிற்காலங்களில் சங்கத்தில் இருந்து நீக்கி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சோனியா தனது பேட்டியில் அந்த நடிகரை முன்னணி நடிகர் என்றும், நடிகர் சங்கத்தில் முக்கியமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதை வைத்து 'இவர் தான் அவர்' என்று நெட்டிசன்கள் அடையாளம் காட்டி வருகிறார்கள்.